2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற சாதிய ஒடுக்கு முறை


2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற சாதிய ஒடுக்கு முறை

                               வன்னி  மக்கள் இறுதி யுத்ததின் போது பல உயிர்கள் சொத்துக்களை இழந்து இருப்பதற்கு இடமின்றி பல இடங்களில் இடம் பெயர்ந்து இறுதியில் முகாம்களில் வசித்து  தற்போது தமது சொந்த இடங்களில் வசித்து வருகிறார்கள். எம் மக்கள் எத்தனை இழப்புக்கள் அழிவுகளை சந்தித்த போதும் சாதிய உணர்வை மட்டும் என்றும் கைவிட மாட்டார்கள்.
                             நான்; அண்மையில் கற்சிலை மடு என்னும் கிராமத்திற்கு சென்று அவர்களுடன் பல விடையங்கள் தொடர்பாக  உரையாடினேன் அப்போது பாடசாலை ஒன்றில் சாதிரீதியாக இடம் பெற்ற ஒடுக்கு முறை தொடர்பாக ஒரு பெண் கூறுகையில்
                               2013ம் ஆண்டு ஜப்பசி மாதம் கற்;சிலைமடு பாடசாலை ஒன்றில் வாணிவிலா கடைசிநாளில் ஒரு கிராமத்திலுள்ள பிள்ளைகள் வீட்டிவிருந்து சாப்பாட்டு பொருட்கள் செய்து கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் இவற்றை வாங்கி சாப்பிடவில்லை ஏனெனில் ஆசிரியர் சாப்பிட தொடங்கும் போது அப்பாடசாலையில் கல்விபயிலும் சில உயர்சாதி மாணவர்கள் ஆசிரியருக்கு கூறினார்கள் இவ்வுணவு செய்த மாணவர்கள் குறைந்த சாதி மாணவர்கள் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று கூறியதும் அந்த ஆசிரியர்களும் வாங்கி உண்ணவில்லை உயர்சாதி பிள்ளைகளும் சாப்பிடவில்லை இதனால் செய்து கொண்டு போன பிள்ளைகள் தாம் ஏன் குறைந்த சாதியில் பிறந்தோம் என்று கவலைபட்டார்கள்;
                                       கடையிலை மட்டும்; சாப்பாடு வாங்கி சாப்பிடும் போது என்ன சாதி என்று கேட்டா வாங்கி சாப்பிடுகிறார்கள் ஆனால் ஊருக்க மட்டும் சாதி குறைந்தவர்களின் வீடுகளில் வாங்கி சாப்பிடமாட்டார்கள். ஏனென்றால் ஊருக்க தான் தெரியும் அவர் அவர் என்ன சாதி என்று அவ் மாணவர்கள் கூறி கவலையடைந்தார்கள் எவ்வாறு நாங்கள் கல்வி கற்று முன்னேற்றம் அடைந்தாலும் சாதிய ஒடுக்கு முறை என்பது எம்மை விட்டு இன்றும் நீங்கவில்லை என்று அவ் மாணவர்கள் கூறினார்கள்.
                                ஆசிரியர் என்பவர்கள் பெரிய அறிவாளிகள் என நம்பி எம் பிள்ளைகளை எத்தனையோ மணித்தியாலங்கள் அவர்களிடம் கல்வி கற்க அனுப்புகின்றோம் ஆனால் பல ஆசிரியர்கள்; படித்த முட்டாள்களாக தான் விளங்குகிறார்கள்  அப் பிள்ளைகளுக்கு அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறுவதந்கு மாறாக தாங்களும் சாதிய முறையை கடைப்பிடிப்பவர்களாக விளங்குகிறார்கள் இவர்களின் படிப்புக்கள் எல்லாம் பட்டம் பதவிக்கும் மாத்திரமே காணப்படுகின்றது.
                                    எம்; மக்கள் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து உயிர்களை இழந்தாலும் சாதிய உணர்வினை மட்டும் மறக்கமாட்டார்கள்.அத்துடன் தமது பிள்ளைகளுக்கு போதிய கல்லியறிவை ஊட்ட மறந்தாலும் சாதிய உணர்வினை மட்டும் சிறுபராயத்திலிருந்து ஊட்ட மறக்க மாட்டார்கள்

1 comment:

  1. தயவு செய்து இவர்களை உயர்சாதி என்று குறிப்பிடாதீர்கள்.

    ReplyDelete